Featured In

Credits

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Saindhavi
Saindhavi
Performer
Vijay
Vijay
Actor
Amala Paul
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் நாளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே
Written by: G. V. Prakash Kumar, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out