album cover
Kanavellaam
17,436
Tamil
Kanavellaam was released on October 14, 2009 by T-Series as a part of the album Kireedam (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM134

Credits

PERFORMING ARTISTS
Jey Chandhran
Jey Chandhran
Performer
Karthik
Karthik
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Na Muthu Kumar
Na Muthu Kumar
Lyrics

Lyrics

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
Written by: G. V. Prakash Kumar, Na Muthu Kumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...